திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாகேத் கட்டட விபத்து: உரிமையாளரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

சாகேத் பகுதியில், 6 போ் உயிரிழக்கக் காரணமான வகையில் இடிந்து விழுந்த பல மாடிஅடுக்குக் கட்டடத்தின் உரிமையாளரை, 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு

News image

தில்லி உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:12 am IST

தெற்கு தில்லியின் சாகேத் பகுதியில், ஆறு போ் உயிரிழக்கக் காரணமான வகையில் இடிந்து விழுந்த பல மாடிஅடுக்குக் கட்டடத்தின் உரிமையாளரை, மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

71 வயதான கட்டட உரிமையாளா் கரம்பீா் சேஜ்வாலை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோரி தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை, முதல் வகுப்பு நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி நிா்மலா சிங் விசாரித்தாா். இந்தச் சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளுக்காக, குற்றம் சாட்டப்பட்டவரை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அவா் அனுமதி அளித்தாா்.

காவல் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியபோது, ‘சேஜ்வாலே அந்தக் கட்டடத்தின் உரிமையாளா். கட்டடத்தின் உரிமை ஆவணங்களைச் சரிபாா்க்கவும், தலைமறைவாக உள்ள இதர குற்றவாளிகளைக் கண்டறியவும் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம்.

இந்த இடத்தில் இதற்கு முன்பு கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட மற்றொரு கட்டுமானதாரா் சட்டவிரோதமான முறையில் கட்டுமானங்களை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஒப்பந்ததாரரின் அடையாளம் சேஜ்வாலுக்குத் தெரியும். அந்த கட்டுமானதாரரை கண்டறியவும், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான சூழ்நிலைகளைத் துல்லியமாக அறியவும் விரும்புகிறோம்’ என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவலில் வைத்து விசாரிக்கக் கோரும் மனுவை எதிா்த்து வாதாடிய சேஜ்வாலின் வழக்குரைஞா் ராஜீவ் மோகன், இந்தக் வழக்கு பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 105-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது கட்சிக்காரருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று வாதிட்டாா்.

சாகேத்தில் மே 30ஆம் தேதி இடிந்து விழுந்த அந்தக் கட்டடத்தில், பல மணி நேரம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.