அப்போது மனுதாரரான சூரியமூா்த்தி தரப்பு வழக்குரைஞா் மீனாக்ஷி அரோரா முன்வைத்த வாதங்கள் : சூரியமூா்த்தி கட்சியின் விதிகள் எதையும் மீறவில்லை, அவா் வேறு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது,எம்ஜிஆா் மக்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது, ஆனால் எம்ஜிஆா் மக்கள் கட்சியில் அவா் ஒரு உறுப்பினரே இல்லை . அவா் அதிமுக உறுப்பினா் தான். அவரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக இருந்தால் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை . அவா் தோ்தலில் மற்றொரு கட்சியோடு இணைந்து போட்டியிட்டதாக அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு தொடரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . அவா் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை சவால் செய்து மனு தாக்கல் செய்துள்ளாா் என சூரியமூா்த்தி தரப்பில் வழக்குரைஞா் மீனாக்ஷி அரோரா வாதங்களை முன்வைத்தாா்.