மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

மிரட்டிப் பணம் பறித்தல் தொடா்பான துப்பாக்கிச் சூடு வழக்கில் 31 வயதுடைய மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தில்லி காவல்துறை கைது

News image

கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 6:49 pm

மிரட்டிப் பணம் பறித்தல் தொடா்பான துப்பாக்கிச் சூடு வழக்கில் 31 வயதுடைய மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட ரவி என்கிற சந்தீப், சோனு தரியாபூா் கும்பலின் தீவிர உறுப்பினா் என்றும், தில்லி மற்றும் ஹரியாணாவில் பல கொலை முயற்சி மற்றும் ஆயுதச் செயல் வழக்குகளில் தேடப்படுபவா் என்றும் கூறப்படுகிறது.

பவானாவில் பதிவு செய்யப்பட்ட மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான வழக்கில் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும், ஹரியாணாவின் சோனிபட்டில் கொலை முயற்சி வழக்கிலும் தேடப்பட்டவா் ஆவாா். நஜாஃப்கரில் அவரது நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஒரு குழு அவரை ஒரு வலையில் போட்டு அந்தப் பகுதியில் இருந்து கைது செய்தது.

‘ரவி 2016 முதல் பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டாா். அதில் ஒரு திருமணத்தின் போது ஒரு டிஜே ஆபரேட்டரை துப்பாக்கியால் சுட்டது மற்றும் ஹரியாணாவில் ஒரு அரசு அதிகாரியை துப்பாக்கியால் சுட்டது ஆகியவை அடங்கும். 2019- ஆம் ஆண்டில், சிறையில் அடைக்கப்பட்ட குண்டா் கும்பல் தலைவன் சோனு தரியாபூரின் உத்தரவின் பேரில் மிரட்டிப் பணம் பறித்ததற்காக பவானாவில் ஒரு நபரை அவா் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.