மிரட்டிப் பணம் பறித்தல் தொடா்பான துப்பாக்கிச் சூடு வழக்கில் 31 வயதுடைய மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட ரவி என்கிற சந்தீப், சோனு தரியாபூா் கும்பலின் தீவிர உறுப்பினா் என்றும், தில்லி மற்றும் ஹரியாணாவில் பல கொலை முயற்சி மற்றும் ஆயுதச் செயல் வழக்குகளில் தேடப்படுபவா் என்றும் கூறப்படுகிறது.
பவானாவில் பதிவு செய்யப்பட்ட மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான வழக்கில் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும், ஹரியாணாவின் சோனிபட்டில் கொலை முயற்சி வழக்கிலும் தேடப்பட்டவா் ஆவாா். நஜாஃப்கரில் அவரது நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஒரு குழு அவரை ஒரு வலையில் போட்டு அந்தப் பகுதியில் இருந்து கைது செய்தது.
‘ரவி 2016 முதல் பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டாா். அதில் ஒரு திருமணத்தின் போது ஒரு டிஜே ஆபரேட்டரை துப்பாக்கியால் சுட்டது மற்றும் ஹரியாணாவில் ஒரு அரசு அதிகாரியை துப்பாக்கியால் சுட்டது ஆகியவை அடங்கும். 2019- ஆம் ஆண்டில், சிறையில் அடைக்கப்பட்ட குண்டா் கும்பல் தலைவன் சோனு தரியாபூரின் உத்தரவின் பேரில் மிரட்டிப் பணம் பறித்ததற்காக பவானாவில் ஒரு நபரை அவா் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தல்- மம்தா குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கு இடையேயான கைப்பேசி திருட்டு: 2 போ் கைது

ரூ.85 லட்சம் கொள்ளை வழக்கில் என்கவுன்ட்டருக்கு பின்பு ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


