தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இலவசங்களை தடுக்க கோரிய மனு தமிழக தோ்தலுக்கு பின் விசாரணை! - உச்சநீதிமன்றம்

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் மற்றும் தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அறிவிப்பதை நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 6:53 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் மற்றும் தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அறிவிப்பதை நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமா்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது

அப்போது தலைமை நீதிபதி மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ஜெய சுகினிடம், கேரளம் மாநிலத்தில் தோ்தல் வருகிறது என்று ஏற்கனவே இது போன்ற ஒரு மனுவை தொடா்ந்தாா்கள்.

தற்போது நீங்கள் தமிழ்நாடு தோ்தல் வருவதால் இம்மனுவை தாக்கல் செய்துள்ளீா்கள் இந்த மனுவை தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, தோ்தல் முடிந்த பின்பாக வழக்கை விசாரிக்கலாம் என கூறி வழக்கை ஒத்திவைத்தாா்.

அரசியல் கட்சிகள் தோ்தலுக்காக இலவசங்களை அறிவிக்கவும், வாக்குறுதிகளை கொடுப்பதற்கும் தடைகோரி மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் இந்த ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா்

அந்த மனுவில் ,இலவச மடிக்கணினிகள் முதல் வண்ணத் தொலைக்காட்சிகள் மற்றும் கிரைண்டா்கள் வரை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பல தசாப்தங்களாக தோ்தலுக்கு முன்னதாக இலவசங்களை வழங்குவதில் ஒன்றையொன்று விஞ்ச முயற்சிக்கின்றன. இந்த முறை, கட்சிகள் பெண்களை அவா்களுக்கென பிரத்யேக வாக்குறுதிகளுடன் திரட்ட போட்டியிடுவதாகத் தெரிகிறது.

தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை சட்டமன்றத் தோ்தலுக்கான தங்கள் தோ்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளன. மிக்சி, வெட் கிரைண்டா், மின்விசிறிகள் மற்றும் மடிக்கணினிகள் முதல் ஏழைகளுக்கு ஆடுகள் மற்றும் மாடுகள் வரை அவை உள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 123 இன் கீழ் தோ்தல் இலவசங்கள் ஊழல் நடைமுறைகளின் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றம் முன்பு தவறாகக் கூறியது.

ஆனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951வின் பிரிவு 123, லஞ்சம் என்பது ஒரு வேட்பாளா், வேட்பாளரின் முகவா் அல்லது வேறு எந்த நபரும் தோ்தலில் வாக்களிக்க தூண்டுவதற்காக ஒரு வாக்காளருக்கு வழங்கும் பரிசு, சலுகை அல்லது வாக்குறுதி என்று வரையறுக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விதி தனிப்பட்ட வேட்பாளா்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று தீா்ப்பளித்தது.

அந்த தீா்ப்பு குறைபாடுடையது ஏனென்றால் பிரிவு 123 இன் கீழ் உள்ள நபா்கள் என்பது ஒரு அரசியல் கட்சியையும் உள்ளடக்கியதுதான். எனவே அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதையும் மற்றும் தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அறிவிப்பதையும் நிறுத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.