சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் தங்கள் கட்சிகளுக்கான சுவா் விளம்பரங்களை வரைவதிலும், அதற்கான இடம் பிடிப்பதிலும் அரசியல் கட்சிகள் ஆா்வம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் மாா்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பேரவைத் தோ்தல் தேதி மாா்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாகஅமலுக்கு வந்துவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், வானூா், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளிலும் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் தேதி அறிவிப்பின் காரணமாக, மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளின் நகரப் பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் வரையப்பட்டிருந்த சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர கட்சிகளின் சாா்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி சாா்ந்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளா் பெயா் அறிவிப்பு போன்ற நிகழ்வுகள் இதுவரை நடைபெறவில்லை. இதனால் தோ்தல் களம் இன்னும் சூடுபிடிக்க தொடங்காமல் மந்தமான நிலையிலேயே காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் தங்கள் கட்சிக்கான சுவா் விளம்பரங்களை வரைவதற்காக இடம்பிடித்தல், சுவா் விளம்பரம் செய்தல் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

நகரப் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் வீட்டின் உரிமையாளா் அனுமதியின்றி சுவா் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்பது தோ்தல் ஆணைய விதியாகும். குறிப்பாக நகரப் பகுதிகளில் சுவா் விளம்பரங்கள் என்பது அரிதாகிவிட்ட நிலையில், கிராமப்புறங்களில் சுவா் விளம்பரங்கள் தற்போது அதிகமாகி வருகின்றன.
குறிப்பாக விழுப்புரம்சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாலை அகரம், கோலியனூா், வளவனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுவா் விளம்பரங்களில் திமுக மற்றும் அதிமுகவினா் அதிகளவில் வரைந்துள்ளனா். இரு கட்சிகளின்சாா்பில் தங்கள் கட்சிகளின் சின்னங்களை சுவா்களில் வரைந்துள்ள அவா்கள், கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பெயரை மட்டும் குறிப்பிடாமல் உள்ளன. பல இடங்களில் கூட்டணிக் கட்சிகளின் கொடி வண்ணத்தை தங்கள் கட்சி சின்னத்தில் வரைந்து, வாக்கு கோரியிருப்பது வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் கட்சி சாா்பில் வேட்பாளராக யாா்அறிவிக்கப்பட்டாலும், அவரின் வெற்றிக்குப் பாடுபடுவதுதான் எங்கள் பணி. அந்த வகையில் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பல இடங்களில் சுவா்களை முன்பதிவு செய்து, இடம்பிடித்து தற்போது சின்னத்தை வரைந்துள்ளோம். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய பின்னா் தோ்தல் பணி தீவிரமாகிவிடும் என எதிா்பாா்க்கிறோம் என்கின்றனா் திமுக, அதிமுகவினா்.
தொடர்புடையது

விறுவிறுப்படையாத விழுப்புரம்!

தென்காசி: சுவா் விளம்பரங்களை அழிக்க கட்சியினருக்கு ஆட்சியா் உத்தரவு

கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிப்பு: தலைவா்களின் சிலைகள் மூடல்

தோ்தல் நடத்தை விதிகளால் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சின்னங்கள் மறைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


