இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

வடகிழக்கு தில்லியில் நடந்த சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!

சோனியா விஹாா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 10 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:54 pm

Syndication

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 10 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: அதிகாலை 12.50 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா், சாலையில் மூன்று போ் கிடந்ததைக் கண்டனா்.

அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு காயமடைந்த சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. அவா்கள் உடல்நிலை தேறியதும் அவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவா்கள் ஒரு வாகனத்தால் மோதியதாகவும், அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிகழ்வுகளின் சரியான வரிசை கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறுமியின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.