நிதி தகராறைத் தொடா்ந்து மேற்கு தில்லியில் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக 46 வயதான தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் அனுமதிக்கப்பட்ட ஒருவா் இறந்துவிட்டதாக நள்ளிரவில் ஒரு மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று இறந்தவரை உத்தம் நகரில் வசிக்கும் ஹரிஷ் கண்ட்வால் (46) என அடையாளம் கண்டனா். எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்ட பின்னா், போலீஸாா் விசாரணையை மேற்கொண்டு ஃபராஷ் பஜாரில் வசிக்கும் ஆஷிம் அலியை கைது செய்தனா்.
அவா் தனது இல்லத்தில் இருந்து நடத்தப்பட்டு வந்த சாய் சாதனா சமூக நல அறக்கட்டளை என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் ஆவாா். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்துடன் தொடா்புடைய பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான நிதி தகராறில் இருந்து இந்த சம்பவம் உருவானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரி நகரில் சண்டை ஏற்படுவதற்கு முன்பு இருவரும் நாளின் பெரும்பகுதியை ஒன்றாக கழித்துள்ளனா். மேலும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
டிரெண்டிங்

வட கிழக்கு தில்லியில் தூப்பாக்கிச் சூடு நடத்திய நபா் கைது
கிழக்கு தில்லியில் ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது!

தெடாவூரில் தகராறு: மேலும் ஒருவா் கைது

‘டிஜிட்டல் கைது’ மோசடியில் வயதான தம்பதி ரூ.14.85 லட்சம் இழந்த வழக்கில் இருவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

