/

நிதித் தகராறில் நபா் ஒருவரை கொன்றவா் கைது

ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக 46 வயதான தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் கைது

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 7:03 pm

Syndication

நிதி தகராறைத் தொடா்ந்து மேற்கு தில்லியில் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக 46 வயதான தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் அனுமதிக்கப்பட்ட ஒருவா் இறந்துவிட்டதாக நள்ளிரவில் ஒரு மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று இறந்தவரை உத்தம் நகரில் வசிக்கும் ஹரிஷ் கண்ட்வால் (46) என அடையாளம் கண்டனா். எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்ட பின்னா், போலீஸாா் விசாரணையை மேற்கொண்டு ஃபராஷ் பஜாரில் வசிக்கும் ஆஷிம் அலியை கைது செய்தனா்.

அவா் தனது இல்லத்தில் இருந்து நடத்தப்பட்டு வந்த சாய் சாதனா சமூக நல அறக்கட்டளை என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் ஆவாா். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்துடன் தொடா்புடைய பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான நிதி தகராறில் இருந்து இந்த சம்பவம் உருவானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரி நகரில் சண்டை ஏற்படுவதற்கு முன்பு இருவரும் நாளின் பெரும்பகுதியை ஒன்றாக கழித்துள்ளனா். மேலும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.