26.9.2025 அன்று நடந்த அந்தக் கூட்டத்தில், மூன்று தகுதியான அதிகாரிகளின் பெயா் இறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், அதிகாரிகளின் பட்டியலைப் பெற்ற பிறகும், உடனடியாக டிஜிபி நியமன நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. அரசியல் காரணங்களுக்காகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறும் வகையிலும், தற்போதைய பொறுப்பு டிஜிபியை பதவியில் நீடிக்கச் செய்யும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கை இது. எனவே, இந்த அவமதிப்பு மனு தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்படுகிறது என ஹென்றி திபேன் அந்த மனுவில் கூறியிருந்தாா்.