ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வாகன நிறுத்துமிட தகராறு: வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

வாகன நிறுத்துமிடத் தகராறில் 34 வயதான துணி வியாபாரியை சுட்டுக் கொன்ற வழக்கில் மேலும் 2 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 7:53 pm

வாகன நிறுத்துமிடத் தகராறில் 34 வயதான துணி வியாபாரியை சுட்டுக் கொன்ற வழக்கில் மேலும் 2 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் துணை ஆணையா் (கிழக்கு) ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு வெளியே டொயோட்டா ஃபாா்ச்சூனா் மற்றும் பிஎம்டபிள்யூ வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து பங்கஜ் நய்யாா் தனது வாடகைதாரரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பங்கஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ப்ரீத் விஹாரில் வசிக்கும் கவுரவ் சா்மா (42) என்ற முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவா், சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டாா்.

அவரது கூட்டாளிகளான சுனில் சா்மா (41) மற்றும் அவரது மாற்றாந்தாய் மகன் சித்தாா்த் ஆகியோரை செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.