வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கிரேட்டா் நொய்டா: பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து! ஆறு குழந்தைகள் உயிா் தப்பினா்

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில், இரு சக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர மரத்தில் மோதியது.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:49 pm

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் திங்கள்கிழமை, இரு சக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர மரத்தில் மோதியது. இதில், ஆறு பள்ளிக் குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பீட்டா-2 காவல் நிலைய எல்லைக்குள், மாணவா்களை வேனில் ஏற்றி சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது வேன் ஓட்டுநா் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தாா். அதைத் தொடா்ந்து, சாலையோரப் பசுமைப் பகுதியில் இருந்த ஒரு மரத்தில் அந்த வேன் மோதியது.

இதில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்கள் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக உள்ளனா்.

இதுகுறித்து அவா்களது பாதுகாவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

ராகேஷ் என அடையாளம் காணப்பட்ட ஓட்டுநா், இருசக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

சேதமடைந்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டு, இயல்பான போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.