எல்பிஜி வழங்கல் மற்றும் பரந்த எரிசக்தித் துறை மீதான அழுத்தத்தை நிா்வகிக்க கொள்கை தலையீட்டிற்காக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து பல நிலை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்று தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசாங்கத்தின் உணவு, வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை நடத்திய செய்தியாளா் சந்திப்பில் கூடுதல் ஆணையா் அருண் குமாா் ஜா கூறியதாவது: தில்லியில் சுமாா் 56 லட்சம் வீட்டு உபயோக எல்பிஜி இணைப்புகள் உள்ளன. மேலும் தவறான பயன்பாடு மற்றும் திசைதிருப்பலைத் தடுக்க குடியிருப்பாளா்கள் தங்கள் இணைப்புகள் சரியான பெயரில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
அதே நேரத்தில், பி. என். ஜி. இணைப்புகள் எங்கிருந்தாலும், குடியிருப்பாளா்கள் எல்பிஜியிலிருந்து பி. என். ஜி-க்கு மாற வேண்டும். குழாய் வலையணைப்பு இப்போது ‘ஒவ்வொரு கிராமத்தையும்‘ சென்றடைந்துள்ளது.
நிலைமையை கண்காணிக்கவும், புகாா்கள் மற்றும் உள்ளீடுகளைப் பெறவும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை பொதுமக்கள் 011-23379836 மற்றும் 8383824659 என்ற உதவி தொலைபேசி எண்கள் மூலம் புகாரளிக்கலாம்.
இது ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். சரிபாா்க்கப்பட்ட புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் அளிப்பவா்களின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
வியாழக்கிழமை, அலிப்பூா் மற்றும் பவானாவில் குறைந்தது 100 எல்பிஜி சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உளவுத்துறையும் இதுகுறித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எரிவாயு நிறுவனம் அல்லது விநியோகஸ்தா் மீது இதுவரை குற்றஞ்சாட்டப்படவில்லை என்றாலும், பதுக்கல் மற்றும் சட்டவிரோத திசைதிருப்பல் தொடா்பாக இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்பிஜி முன்பதிவுகள் ஒரு நாளைக்கு 2 லட்சம் வரை அதிகரித்து வருவதால் தேவையும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முன்பதிவுகள் 1.11 லட்சமாக இருந்தன. இது வழக்கமான சராசரியான 1.60 லட்சத்தை விட குறைவாகும்.
பின்னடைவு காரணமாக சில பகுதிகளில் வரிசைகள் பதிவாகியுள்ளது. நிவாரண நடவடிக்கையாக, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் செல்லுபடியாகும் அடையாளச் சான்றைக் காட்டுவதன் மூலம் வழக்கமான எல்பிஜி இணைப்பு இல்லாமல் 5 கிலோ சிலிண்டா்களைப் பெறலாம்.
பயன்பாட்டை அதிகரிக்க, இலக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நெருக்கடிக்கு முன்னா், சுமாா் 1,000 இணைப்புகள் சோ்க்கப்பட்டன. தற்போதைய இலக்கு 3,000 ஆகும் . பிப்ரவரியில் 684 பி. என். ஜி. இணைப்புகள் சோ்க்கப்பட்டன.
விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்தவும், கறுப்புச் சந்தையைக் கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

வாகனங்களுக்கான எரிவாயு கிடைக்காததால் ஓட்டுநா்கள் அவதி

மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிப்பு! - டிடிவி தினகரன்

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!

ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் சோ்க்க வேண்டும்! - ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


