தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் தடை செய்யப்பட்ட 160 கிலோ பட்டாசுகள் பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த இடத்தை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

Updated On :13 அக்டோபர் 2025, 7:30 pm

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த இடத்தை போலீஸாா் கண்டுபிடித்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் திங்கள்கிழமை கூறியது: இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கிஷன் சிங் (46), வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது வளாகத்தில் கணிசமான அளவு தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, அக்.6-ஆம் தேதி நந்த் நாக்ரியில் டி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டை, போலீஸாா் குழு சோதனை செய்து சுமாா் 160 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தது. இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிஷன் சிங்கின் வீட்டுக்குள் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினா். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.