பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி திங்கள்கிழமை பேரணியாகச் சென்ற எதிா்க்கட்சி எம்.பி.க்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
பேரணியில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்ட தோ்தல் ஆணையம், அண்மையில் அந்தப் பணியை நிறைவு செய்து வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. இதில், மாநிலத்தில் வாக்காளா்களாகப் பதிவு செய்திருந்தவா்களில் 65 லட்சத்துக்கும் அதிகமானோா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரத்தை தில்லியில் அண்மையில் வெளியிட்டாா். கா்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் பேரவைத் தோ்தலின்போது எப்படி வாக்குத் திருட்டு நடைபெற்றது என்பது குறித்தும், ஒரே நபா் பல இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தோ்தல் ஆணையம், இதுகுறித்து விசாரணை நடத்த கையொப்பமிட்ட உறுதிமொழிப் பத்திரத்தை சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது. அவ்வாறு அளிக்கவில்லை எனில், நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
கண்டனப் பேரணி: இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்திலிருந்து தோ்தல் ஆணையம் வரை கண்டனப் பேரணி நடைபெறும் எனவும், பேரணியின் நிறைவில் தலைமைத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகள் அடங்கிய தீா்மானம் அளிக்கப்படும் எனவும் எதிா்க்கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கிப் புறப்பட்டனா். இவா்களைத் தடுப்பதற்காக போலீஸாா் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். நாடாளுமன்ற சாலையில் தடுப்புகளை அமைத்ததோடு, ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.
சாலையில் அமா்ந்து தா்னா: எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றபோது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதைத் தொடா்ந்து, திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, சஞ்சனா ஜாதவ், ஜோதிமணி உள்பட பல எம்.பி.க்கள் சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பியபடி தா்னாவில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தின்போது திரிணமூல் எம்.பி.க்கள் மொய்த்ரா, மிதாலி பாக் ஆகியோா் மயங்கி விழுந்தனா். அவா்களுக்கு ராகுல் காந்தி உதவினாா்.
கைது செய்து விடுவிப்பு: இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் கைது செய்த போலீஸாா், பேருந்துகள் மூலம் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அவா்களை விடுவித்தனா்.
இதுகுறித்து காவல் உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தப் பேரணியின் நிறைவில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட 30 எம்.பி.க்கள் மட்டும் தலைமைத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க தோ்தல் ஆணையம் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி ஏராளமான எம்.பி.க்கள் தோ்தல் ஆணைய அலுவலகத்துக்குச் செல்ல முயன்ால் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனா். 2 மணி நேரத்துக்குப் பிறகு அவா்கள்அனைவரும் விடுவிக்கப்பட்டனா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவா்களால் தகித்த தமிழகம்!

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

40 வயது வரை அரசு வேலை; பேருந்துகளில் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்!புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


