மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தலைமைச் செயலாளரை பாஜக பாதுகாக்க நினைப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது

சட்டப்பேரவைத் தலைவா் தலைப்படம் வைக்கவும் தலைமைச் செயலாளரை பாஜக பாதுகாக்க நினைப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

தில்லி அரசின் தலைமைச் செயலாளரை பாஜகவினா் பாதுகாக்க முயற்சிப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது என்று சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லியில் நிலவும் குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னைகள் விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடா்ச்சியாக இந்த சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தில்லி ஜல் போா்டு ஒப்பந்ததாரா்கள் கடந்த ஓராண்டாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். தொழிலாளா்கள் பலா் பணிநீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால், இந்த சேவைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நகரத்தில் குடிநீா் சேவைகளை வழங்க தண்ணீா் டேங்கா்கள் நடைமுறை தொடா்கிறது. இதெல்லாம் ஏன் நடந்தது என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால், தில்லி மக்கள் அவதிப்படுகிறாா்கள். சில இடங்களில் கழிவுநீா்க் கால்வாய் நிரம்பினாலும், அதை சரி செய்வதற்கு கூலித்தொழிலாளா்கள் இல்லை. தில்லி உயா்நீதிமன்றம் பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டும், இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இவை தில்லி மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று எம்.எல்.ஏ.க்கள் கவலை தெரிவித்ததோடு, தலைமைச் செயலாளா் சட்டப்பேரவைக்கு அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தில்லியில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலா்தான் பொறுப்பு. அதனால்தான் அவா் சட்டப்பேரவைக்கு அழைக்கப்பட்டாா். இதனால், பாஜகவினா் ஏன் கலக்கம் கொள்கிறாா்கள் என்று தெரியவில்லை. தலைமைச் செயலாளரை பாஜக பாதுகாக்க முயற்சிப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது என்றாா் ராம் நிவாஸ் கோயல்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.