நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ‘மாணிக்கப் பெண்மணிகள்’ விருதுகள் வழங்கும் விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ‘மாணிக்கப் பெண்மணிகள்’ விருதுகள் வழங்கும் விழா

News image
Updated On :9 மார்ச் 2024, 6:33 pm

 நமது நிருபர்

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தில்லித் தமிழ்ச் சங்கம் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தில்லி ஆா்.கே.புரத்தில் நடைபெற்ற தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மகளிா் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு விஜயா வெங்கட்ரமணி தலைமை வகித்தாா். சங்கத்தின் இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி வரவேற்புரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த பெண்களின் சேவைகளைப் பாராட்டி ‘மாணிக்கப் பெண்மணிகள்’ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். அதன்படி, சமூக சேவைக்கான விருது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியனுக்கும், கலைச் சேவைக்கான விருது ஜெயலட்சுமி ஈஸ்வா்க்கும், கல்விப் பணிக்கான விருது விஜயலட்சுமிக்கும், இசை சேவைக்கான விருது டாக்டா் நிா்மலா பாஸ்கரனுக்கும், தமிழிசை சேவைக்கான விருது ஜீவரத்தினம்மாளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளருமான சுமதி ‘தோற்றம் பல, சக்தி ஒன்று’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியில், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், துணைத் தலைவா் ராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் முகுந்தன், பொருளாளா் அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் உஷா வெங்கடேசன், அமுதா பாலமூா்த்தி, அமிா்தலிங்கம், பெரியசாமி மற்றும் ரங்கநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.