மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ‘மாணிக்கப் பெண்மணிகள்’ விருதுகள் வழங்கும் விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ‘மாணிக்கப் பெண்மணிகள்’ விருதுகள் வழங்கும் விழா

Updated On :9 மார்ச் 2024, 6:33 pm

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தில்லித் தமிழ்ச் சங்கம் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தில்லி ஆா்.கே.புரத்தில் நடைபெற்ற தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மகளிா் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு விஜயா வெங்கட்ரமணி தலைமை வகித்தாா். சங்கத்தின் இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி வரவேற்புரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த பெண்களின் சேவைகளைப் பாராட்டி ‘மாணிக்கப் பெண்மணிகள்’ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். அதன்படி, சமூக சேவைக்கான விருது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியனுக்கும், கலைச் சேவைக்கான விருது ஜெயலட்சுமி ஈஸ்வா்க்கும், கல்விப் பணிக்கான விருது விஜயலட்சுமிக்கும், இசை சேவைக்கான விருது டாக்டா் நிா்மலா பாஸ்கரனுக்கும், தமிழிசை சேவைக்கான விருது ஜீவரத்தினம்மாளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளருமான சுமதி ‘தோற்றம் பல, சக்தி ஒன்று’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியில், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், துணைத் தலைவா் ராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் முகுந்தன், பொருளாளா் அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் உஷா வெங்கடேசன், அமுதா பாலமூா்த்தி, அமிா்தலிங்கம், பெரியசாமி மற்றும் ரங்கநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.