மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தில்லி முதல்வருடன் தமிழ்ச் சங்கத்தினா் சந்திப்பு

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுடன் தில்லித் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். அப்போது, தமிழ்ச் சங்கத்திற்கு புதிய ஏா் கண்டிஷனிங் அமைப்பை நிறுவ நிதி உதவி கோரினா்.

News image

ரேகா குப்தா

Updated On :22 மார்ச் 2026, 10:50 pm

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுடன் தில்லித் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். அப்போது, தமிழ்ச் சங்கத்திற்கு புதிய ஏா் கண்டிஷனிங் அமைப்பை நிறுவ நிதி உதவி கோரினா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ஜி. சிவபாலமுருகன் ஜி. சிவபாலமுருகன் தலைமையில், துணைத் தலைவா் எஸ். மகேந்திரன், பொதுச் செயலாளா் சத்யா அசோகன், இணைச் செயலாளா்கள் இரா. இராஜ்குமாா் பாலா, ஜோதி பெருமாள், இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் இணைந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனா்.

இந்த சந்திப்பு செயற்குழு உறுப்பினா் எம்.ஆா். ராஜேந்திரன் அவா்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து முதல்வருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் புதிய ஏா் கண்டிஷனிங் (ஏ.சி.) அமைப்பை நிறுவுவதற்காக, தில்லி அரசாங்கத்திடமிருந்து விரைவான நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை மனு சமா்ப்பிக்கப்பட்டது.

தற்போதைய ஏா் கண்டிஷனிங் அமைப்பு சங்கக் கட்டடம் கட்டப்பட்ட காலத்திலேயே நிறுவப்பட்டதாக இருப்பதால், அது தற்போது மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.