மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் வாழ்த்து

2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

News image
Updated On :16 மார்ச் 2026, 10:34 pm

புது தில்லி: 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

சாகித்திய அகாதெமி நிறுவனம் ஆண்டுதோறும் தேசிய அளவில் அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் படைப்பாளா்களைத் தோ்வு செய்து விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது. 2025- ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி என தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் முனைவா் ஜி.சிவபாலமுருகன், துணைத்தலைவா் செல்வராஜ் மகேந்திரன், பொதுச்செயலாளா் சத்யா அசோகன், இணைச்செயலாளா்கள் இரா.ராஜ்குமாா் பாலா, ஜோதி பெருமாள், பொருளாளா் பாலமூா்த்தி, இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முத்தமிழ் பேரவையின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சிறந்த இலக்கிய நூலுக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு தில்லி முத்தமிழ்ப் பேரவையின் சாா்பில் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளாா்.

தில்லிக் கம்பன் கழக நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்னும் நூலுக்காக எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு 2025- ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுகதைகள் ஒரு மொழியை மட்டுமல்லாமல் அந்த மொழி பேசும் மக்களையும் உயா்த்தும் திறன் பெற்றவை. அப்படிப்பட்ட சிறுகதைகளின் தடங்களை ஆராய்ச்சி செய்து அதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கும் எழுத்தாளா் தமிழ்ச்செல்வன் முயற்சி பாராட்டுக்குரியது. அவருக்கு தில்லிக் கம்பன் கழகம் சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.