அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சுவையான அதிரசம் செய்ய இதோ எளிய குறிப்பு

சுவையான அதிரசம் செய்வது பெரிய விஷயம் இல்லைங்க.. பாகு எடுக்கும் பதமும், மற்ற விஷயங்களில் சரியான கவனமும் இருந்தாலே போதும்.

News image

சுவையான அதிரசம் செய்ய இதோ எளிய குறிப்பு

Updated On :22 அக்டோபர் 2022, 10:43 am


சுவையான அதிரசம் செய்வது பெரிய விஷயம் இல்லைங்க.. பாகு எடுக்கும் பதமும், மற்ற விஷயங்களில் சரியான கவனமும் இருந்தாலே போதும்.

ஒரு முறை ஏதேனும் தவறு நேர்ந்தாலும் அடுத்தமுறை தவறுகளை சரி செய்தாலே எளிதாக அதிரசம் செய்வதில் வல்லவராகிவிடலாம்.

அதிரசம் தேவையானவை:
பச்சரிசி -அரை கிலோ
வெல்லம் - அரை கிலோ
ஏலக்காய் (பொடித்தது) - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை : 

இதையும் படிக்க | ரூம் போட்டு யோசிப்பாங்களோ? கடத்தல்காரர்களின் படைப்பாற்றலை வியக்கும் அதிகாரிகள்

முதலில் பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 
பிறகு ஒரு மெல்லிய வெண்ணிறத் துணியில் பரப்பி நிழல்பட காய வைக்கவும். ஈரம் காய்ந்த பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு அடி கனமாக உள்ள பாத்திரத்தில் வெல்லத்தைத் தூளாக்கிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். 

பாகுப் பதமாக வரும்போது ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பாகை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

பாகு சூடாக இருக்கும் போதே, பச்சரிசி மாவை சிறிது, சிறிதாக கொட்டி கிளறவும். இந்த கலவை சிறிது ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, எண்ணெய் தடவியுள்ள வாழையிலை அல்லது பாலித்தீன் பேப்பரில் அதிரசங்களாகத் தட்டிக் கொள்ளவும்.

வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தட்டி வைத்துள்ள மாவைப் போட்டு பொரித்தெடுக்கவும். 

நன்றாக வெந்து, சிவந்த நிறமானதும் எண்ணெய்யை முழுமையாக வடித்து அதிரசத்தை எடுத்து, ஆறிய பின்பு பாத்திரத்தில் வைக்கவும். 

சுவையான அதிரசம் தயார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.