நாடு, மதம், மொழி, இன வித்தியாசங்கள் கடந்து இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக நிற்கிறது இறுதிக் காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு தவிக்கும் முதியோரின் பரிதாபநிலை. அப்படிப் பட்ட நிலையில் தங்கள் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களுக்காக மட்டுமே நீதிமன்றப் படியேறுவதென்பது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயல். இந்த சுயநல அணுகுமுறையை நீதிமன்றம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்காது. எனவே கடைசிக் காலத்தில் எந்த வாரிசுகள் தம் பெற்றோரை கவனித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கே சொத்தில் பெரும்பான்மையை எழுதி வைக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என ஜஸ்டிஸ் நவின் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி இருவரும் இணைந்த உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்தது.