அந்தச் சமயத்தில் என் அப்பா, என்னிடம் வந்து உனது இந்த புதிய முயற்சி குறித்து நீ ஏன் ரத்தன் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதக் கூடாது? என்று கேட்டார். ஏனென்றால் அவரும் நாய்களின் மீது மிகுந்த பரிவு கொண்டவர்கள் என்பதால் கடிதம் எழுதினால் நல்லது என்றார் அப்பா. எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது, பிறகு யோசித்துப் பார்க்கையில் ஏன் கூடாது?! என்றும் தோன்றியது. சரி கடிதம் எழுதி அனுப்பி விட வேண்டியது தான் என்று முடிவெடுத்து என் கையால் சொந்தக் கையெழுத்தில் ரத்தன் டாடாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு, பிறகு அதை மறந்தும் போனேன்.