இன்றைய நடிகைகள் நட்புறவுடன் இல்லாததற்கு காரணம் கேரவன் கலாசாரமே: நளினி!
இன்றைய நடிகைகள் நட்புறவுடன் இல்லாததற்கு காரணம் கேரவன் கலாசாரமே: நளினி!


இந்தத் தலைமுறை நடிகர்கள் மற்றும் நடிகைகளிடையே நட்புணர்வும், ஒற்றுமையும், கலகலப்பான உரையாடலும் குறைவாக இருப்பதற்கு முதல் காரணமே இந்த கேரவன் கலாசாரம் தான் என்கிறார் நடிகை நளினி. நளினி 80 களில் பிரபல ஹீரோயின். அவர் தனது சமகால நடிகைகளாகக் குறிப்பிடும் அம்பிகா, கீதா, ஊர்வசி, வனிதா, சாதனா அனைவருடனும் இன்றும் கூட அதே இனிமையும், நெருக்கமும் நிறைந்த நட்புறவுடன் இருக்க முடிகிறதென்று குறிப்பிடுகிறார். காரணம் அப்போதெல்லாம் எத்தனை பிஸியான நடிகர், நடிகைகளாக இருந்தாலுமே படப்பிடிப்பு இடைவேளைகளில் நடிகர், நடிகைகள் கும்பலாக அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்துக் கொண்டு, கேலி செய்து கொண்டு உணவு உண்பது வழக்கம். ஆனால் இன்று அப்படியல்ல, கேரவன் கலாச்சாரம் வந்த பிறகு ஷாட் முடிந்ததும் நடிகர், நடிகைகள் கேரவனுக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். பிறகெப்படி சக நடிகர், நடிகைகளுடன் நட்புறவோடு இருக்க முடியும்? என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...