பள்ளிக்குக் கிளம்பும் காலை நேரத்தில் ஒவ்வொரு வீடுமே ஒரு போர்க்களம் தான். அதிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளியில் பயிலும் வயதிலிருக்கும் குழந்தைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி ஓய பள்ளிப்பேருந்தோ அல்லது வேனோ வரும் வரையிலும் வீட்டுக்குள் சம்பிரதாயமாக இடி, மின்னல், மழையோசை கேட்டுக்கொண்டே தான் இருக்கும். ஒருவழியாகப் பிள்ளைகளைத் தயார் செய்து வேனுக்குள் திணித்தோ அல்லது பேருந்துக்குள் ஏறக்கட்டியோ அனுப்பி விட்டு வீட்டுக்குள் நுழைந்து கதவடைத்துத் திரும்பிப் பார்த்தால் உள்ளே பிள்ளைகள் அங்காங்கே கழட்டிப் போட்டு, கிளறிப் போட்டு விட்டுப் போன பொருட்களின் சிதறல்கள் நம்மை மூச்சைடைக்க வைக்கும். அதையெல்லாம் சரி செய்து நிமிர ஏறத்தாழ முழுதாக 1 மணி நேரம் தேவைப்படலாம். இது ஒவ்வொரு வீட்டிலும் தினசரி வழக்கமான கதையே!