சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பிரெட், பிஸ்கட், வொயிட் பிரெட், ரஸ்க் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் உடல் எடை கூடும். அதுமட்டுமல்ல சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் அவ்விதமாக சுத்திகரிக்கப் படுவதற்காக பல்வேறு விதமான ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த ரசாயனங்களால் அந்தந்த தானியங்களுக்குண்டான இயல்பான சத்துக்கள் கெடுகின்றன. முடிவில் நமது தட்டுக்கு கொண்டு வரப்படும் போது அது நாம் உண்ணத்தகாத உணவுப் பொருளாகக் கூட பல சந்தர்பங்களில் மாறி விடுகிறது. எனவே பழைய காலங்களைப் போல கைக்குத்தல் அரிசியும், கழனி நெல்லும், புஞ்சை நிலத்து கம்பு, சோளம், கேழ்வரகுமாக உண்டு வாழ்வதே நலம் தரக்கூடும். முக்கியமாக இந்த பிரெட் வகையறாக்களை தவிர்த்து விடுதல் மிக நல்லது. இல்லாவிட்டால் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையில் அளவை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கி விடும் அபாயம் உண்டு.