மகன்களுக்கு அம்மாக்கள் கடிதம் எழுதுவதொன்றும் புதுமையான செயல் இல்லை. ஆனால், இந்த அம்மா, தன் உள்ளதையெல்லாம் உருக்கி கண்ணெதிரில் மகனிருப்பதாகப் பாவித்துக் கொண்டு எழுதியுள்ள இந்தக் கடிதம் நிதர்சனத்தில் என்றுமே அவரது மகனைச் சென்று சேர வாய்ப்பே இல்லாத போதும்... மகனது நினைவில் வாடும் அந்த அன்பான தாயின் ஏக்கம் இந்தக் கடிதத்தை எழுதிய காரணத்தால் ஓரளவு தீர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறோம். தகப்பனார் பெயர் ஜெயப்பிரகாசம் என்று அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தாலும் தாயின் பெயரையும் இனிஷியலாகப் பயன்படுத்தலாம் என்பதால் தலைப்புக்கு பொருத்தமாக எம். குமரகுரு என்று சுட்டியிருக்கிறோம். கடிதம் எழுதிய அன்னை ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்!