இந்தச் சூழலில் தான் திடீரென ஒருநாள், அவர் முயல்வதற்கு முன்பாகவே; தியாவின் வகுப்புத் தோழியான மற்றொரு குழந்தை பூஜா விளையாட்டுப் போக்கில், நீ ஏன் தினமும் ஸ்கூலுக்குள்ள நுழையும் போதெல்லாம் அழுதுகிட்டே இருக்க? உங்கம்மா ஸ்கூல் விட்டதும் உன்னை கூட்டிட்டுப் போக வந்துடுவாங்கல்ல, அப்புறம் ஏன் அழற? என்று கேட்டு வைக்க; தியா, தனது அழுகையைச் சற்று நிறுத்தி விட்டு, பொறுப்பாக அவளுக்கு பதில் அளிக்கிறாள். அந்த நேரம் தற்செயலாக வகுப்பறையில் நுழையும் ஆசிரியை தியாவின் பதிலைக் கேட்டு ஒரு நொடி நெக்குருகித் தனக்குள் குமைந்து போகிறார்.