இந்தியர்களும், சீனர்களும் வெகு பழங்காலத்திலேயே முட்டை உற்பத்தியை வீட்டிலேயே தொடங்கி இருந்தாலும், கி.பி 800 ஆம் ஆண்டுவரையிலும் கூட மேற்கு ஆசியா, ஐரோப்பா, எகிப்து உள்ளிட்ட பிரதேசங்களில் கோழி முட்டை பயன்பாடு புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. தெற்கு ஆப்ரிக்காவிலும் கூட கி.மு 500 வரையிலும் கோழி முட்டை பயன்பாட்டில் இல்லாமல் தான் இருந்தது. அந்த காலகட்டத்தில் மேற்கு ஆசியாக் கண்டத்திலும், ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்கள் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் வாத்துக்களை வளர்க்கத் தொடங்கி இருந்தார்கள். பிறகு படிப்படியாக முட்டை உலகெங்கும் பிரசித்தி பெற்ற உணவுப் பொருளானது.