ஆனால், குழந்தைகளை தங்களுடன் எடுத்துச் சென்று விட்ட திருமதி. லுயிஸ் ஒரு மாதம் கடந்த நிலையில் அந்தக் குழந்தைகளின் புகைப்படத்தை ஜெஸிக்காவுக்கு அனுப்பி இருந்தார். ஏனெனில், இரு குழந்தைகளும் வெவ்வேறு சாயல்களுடனிருந்தன. மேக்ஸ், மைக் என்று பெயரிடப்பட்டு வளர்ந்து வந்த அந்தக் குழந்தைகளில் மைக்கின் சாயல் சீனத்தம்பதிகளைப் போலிருந்தாலும் மேக்ஸின் சாயல் அவர்களைப் போல இல்லை. அது அப்படியே ஜெஸிக்காவைப் போல இருந்தது. அதனால் தான் ‘இரு குழந்தைகளும் வெவ்வேறு சாயலில் இருப்பது ஏன்? உனக்கு அதன் பொருள் விளங்குகிறதா?’ என்ற குறிப்புடன் திருமதி. லியுஸ், ஜெஸிக்காவுக்கு குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பி இருந்தார்.