அன்றாட வாழ்வில் செம்பினால் செய்யக் கூடிய சிகிச்சை முறைகளை ‘மெட்டலோதெரபி’ என்கிறார்கள். இந்த சிகிச்சை முறையின் அடிப்படை, செம்பு நாணயங்கள் மற்றும் தகடுகளைப் பயன்படுத்தி நமது உடலில் உள்ள நோய்க்காரணிகளை குணப்படுவதுவதே! சிகிச்சைக்காக நாம் பயன்படுத்தப் போகும் செம்பு நாணயங்கள் மற்றும் தகடுகளைப் பட்டை தீட்டியோ அல்லது துவாரங்கள் இட்டோ பயன்படுத்தும் போது அவற்றினால் கிடைக்கக் கூடிய பலம் மிக அதிகமாகக் கூடிய வாய்ப்பு உண்டாம். செம்பு நாணயங்களை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் முன் 10 முதல் 20 நிமிடங்கள் ஒரு வாணலியில் இட்டு அவற்றைச் சூடாக்கி கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விடு சூடான உலோகத் தகடுகளை ஆற விட்டு, அவை ஆறிய பின் உப்புத்தாள் கொண்டு தேய்க்க வேண்டும். அப்படிச் செய்தால் நாணயம் அல்லது தகடில் இருந்து செம்பு விடுபட்டுக் கசியும். இப்போது நன்றாகத் தேய்த்து பாலிஷ் செய்த இந்த செம்பு நாணயங்களை அல்லது தகடுகளை ஒரு கிளாஸில் நிறப்பப் பட்ட 1 டேபிள் ஸ்பூன் சோடியம் குளோரைடு கலந்த கரைசலில் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊறிய செம்பு நாணயங்களை எடுத்து நமது உடலில் நோய் பாதிப்பு இருக்கக் கூடிய இடங்களில் எல்லாம் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது வைத்து எடுக்க வேண்டும். இந்த முறையைத் தினமும் ஒரு முறையென 15 நாட்களுக்கு செய்து வந்தால். செம்பினால் தீர்க்கக் கூடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.