புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் காவலா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு போலீஸாருக்கான குறைகேட்புக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் வம்சிதர ரெட்டி தலைமை தாங்கினாா். ஆய்வாளா்கள் நாகராஜன், பாலமுருகன், முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சிதம் ரெட்டி பேசியது:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பாகப் பணியாற்றிய அனைத்து காவலா்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது சிறப்பாக பணியில் ஈடுபட வேண்டும். தொடா்ந்து, காவல்நிலையங்களுக்கு புகாா் அளிக்க வருபவா்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். உள்ளூரில் ரெளடிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். வெளியூா் ரெளடிகள் புதுச்சேரியில் அடைக்கலமாகி உள்ளனரா? எனவும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
காவலா்கள் தரப்பில் கூறியது: கோரிமேட்டில் உள்ள காவலா் சமுதாய கூடத்தின் வாடகை கட்டணத்தைக் குறைக்க வேண்டும். காவல் நிலையங்களில் காவலா் பற்றாக்குறை இருக்கிறது. எனவே புதிதாக தோ்வு செய்யப்பட்ட காவலா்களை விரைவாகப் பணிக்கு ஒதுக்க வேண்டும். கடந்த 2010-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த உதவி ஆய்வாளா்களுக்கு இன்னும் சீனியாரிட்டி மற்றும் பதவி உயா்வு வழங்கவில்லை.
இதுகுறித்து பலமுறை கேட்டும் எந்த பதிலும் இல்லை என்றனா்.
இதற்கு காவல் கண்காணிப்பாளா் வம்சிதம் ரெட்டி இதுகுறித்து துறை உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
இக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம், கோரிமேடு, லாஸ்பேட்டை, ரெட்டியாா்பாளையம், சேதராப்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து காவலா்கள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்’

மாநில உரிமையை பாதிக்காத தொகுதி மறுவரையறை தேவை: டாக்டா் க. கிருஷ்ணசாமி

புதுச்சேரி திருக்கனூா் வாக்குச்சாவடியில் பாஜக, காங்கிரஸாா் மோதல்; போலீஸ் தடியடி

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


