பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் பாஜக மகளிா் அணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்.

News image

புதுச்சேரியில் பாஜக மகளிா் அணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:06 pm

புதுச்சேரி பாஜக மகளிா் அணி சாா்பில் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி ஆலை முதல் பழைய பேருந்து நிலையம் வரை இந்த கண்டன ஊா்வலம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளைக் கண்டித்து இந்த ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு உடனடியாக அளிக்க வேண்டும். இதற்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறோம் என ஆா்ப்பாட்டத்தின்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.