அங்கிருந்த மருத்துவர்களிடம் ராஜ்குமாரின் தந்தை, என் மகன் பாம்பு கடித்து சீரியஸான நிலையில் இருக்கிறான், அவனுக்கு சிகிச்சை அளிக்க என்னிடம் போதுமான பணவசதி இல்லை என்பதால் இங்கு அழைத்து வந்தேன், நீங்கள் தான் எப்படியாவது அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியபோது முதலில் மருத்துவர்கள், நோயாளியை பாம்பு கடித்து விட்டது போலும் என்று நினைத்து விட்டார்கள். அப்புறம் தான் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது, நோயாளியை பாம்பு கடித்தது மட்டுமே இங்கு பிரச்னை இல்லை, பதிலுக்கு நோயாளியும் பாம்பைக் கடித்ததில் விஷம் முற்றிய நிலையில் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று.