அதோடு கூட, சம்பவம் நடந்த அந்தப் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் இதை முற்றிலுமாக ஒரு விபத்து என்று கூறி தப்பிக்க நினைப்பதும் தவறு.
இது விபத்தாகவே இருந்தாலும், தன்னை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து விடுமுறைக் கொண்டாட்டங்களை அனுபவிக்க வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடத் தக்க வகையிலான இம்மாதிரியான பாதுகாப்பற்ற விளையாட்டுகளை எல்லாம் அவர்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்பது முதல் கேள்வி; அப்படியே அனுமதித்தார்கள் எனில், இந்த விளையாட்டால், இன்னின்ன பாதகங்கள் வரலாம் என முன்கூட்டியே அனுமானித்து, அத்தகைய பாதகங்களோ அல்லது விபத்துக்களோ நேர்ந்தால் பாதிக்கப்பட்டவர்களை போர்க்கால அவசர நடவடிக்கை எடுத்து உடனடியாக காப்பாற்றத் தோதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் தயார் நிலையில் வைத்திராதது யாருடைய குற்றம்?!