பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பலே திருடர்களும், தோல்வியில் முடிந்த திருட்டும்! வைரலாகும் லைவ் வீடியோ!

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!

News image
Updated On :16 பிப்ரவரி 2018, 7:24 am

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!

அதே தான்...  ஆனால் இங்கே தேள் கொட்டவில்லை கல்... செங்கல் நன்றாகப் பதம் பார்த்து விட்டது. திருடனைத் தேள் கொட்டினால் என்ன, செங்கல் பதம் பார்த்தால் என்ன? எப்படியோ திருட்டு நிகழாமல் தடுக்கப்பட்டால் சரி தானே?! 

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த லைவ் திருட்டு வீடியோ இது தான்...

திரைப்படங்களில் தான் பெரும்பாலும் இப்படியான காட்சிகள் அரங்கேறி நம்மை குலுங்கிச் சிரிக்க வைக்கும். ஆனால், இப்போது நிஜமாகவே அப்படியொரு காட்சி அரங்கேறி இணையத்தில் வைரலாகி இருப்பதோடு சீனக் காவல்துறையினரையும் புன்னகைக்க வைத்திருக்கிறது. ஷாங்காய் நகரில் ஒரு பெரிய மாலின் கண்ணாடிக் கதவை செங்கல்லால் உடைத்துத் திறந்து அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்திருக்கிறார்கள். அப்படி செங்கல்லை வீசும் போது துரதிருஷ்டவசமாக திருடனின் கூட்டாளியே தெரியாத்தனமாக குறுக்கே வந்து விட உடைந்தது கண்ணாடிக் கதவில்லை. அந்தக் கூட்டாளியின் மண்டை. இனி என்ன செய்வது? தலையில் ரத்தம் சொட்டச் சொட்டச் திருடும் அளவுக்கு அவர்கள் ஜெகஜ்ஜாலத் திருடர்கள் இல்லை போல... அடிபட்ட கூட்டாளியைக் காப்பாற்றும் நோக்கில் அவர்கள் இருவரும் தங்களது திருட்டு முயற்சியைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து அகல்வதைப் போலான காட்சி சர்வலைன்ஸ் கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதைக் கண்ட ஷாங்காய் காவலர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. திருடர்கள் இப்படி  அதி புத்திசாலித்தனமாகத் திருடத் திட்டம் போட்டால், அப்புறம் காவல்துறையினர் ஓவர் டைம் பார்த்து நடு இரவில் வேலை செய்யத் அவசியமே இல்லாமலாகி விடக்கூடும். என்று கூறிச் சிரிக்கிறார்களாம் அவர்கள்! 

Related Article

#MeToo  ஹேஷ்டேக்கில் அரைநூற்றாண்டுக்குப் பின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்க வைப்பதின் நோக்கம் தொழிற்போட்டியா?!

ஜப்பான் இளவரசியின் திருமண ஒத்தி வைப்புக்கான காரணம்?!

புடவை அணிந்து மாரத்தானில் ஓடி கின்னஸ் சாதனை செய்தார் இவர்!

உங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியவில்லையா? கண்டுபிடிக்க இதோ ஒரு வழிமுறை!

லவ் லாப்! (Love Lab) இப்படி ஒரு மையம், இப்படி ஒரு ஆராய்ச்சியா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.