ஆனால் பயணிக்க, பயணிக்க அவரது தற்கொலை வேகம் தணிந்தது மட்டுமல்ல நாட்டின் வெவ்வேறு கலாச்சாரங்களையும், மக்களது ஏழ்மையையும், கடினமான அவர்களது வாழ்க்கையும் கண்ணாரக் காணக் காண ஷனாவுக்கு தற்கொலையின் மீது வெறுப்பானது. விளைவு தனது பயணத்தின் முடிவில் ஷனா, தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்களௌக்கு மன நல ஆலோசனை வழங்கி அவர்களது தற்கொலை எண்ணத்தை முறித்துப் போகச் செய்யும் அளவுக்கு மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக அடையாளம் காணப்படும் நிலையில் வந்து நின்றார். ஊடகங்கள் ஷனாவுக்கு வழங்கிய அடையாளம் இது தான். தற்கொலை எத்தனை கொடுமையான முடிவு என, அந்த முயற்சியில் ஈடுபட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்களால் தானே உண்மையாக அறிந்திருக்க முடியும். ஷனா அறிந்திருந்தார் என்பதற்கு அவரது தன்னம்பிக்கைப் உரைகளே உதாரணம்.