2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஷனா இக்பால்! தற்கொலைக்கு எதிரான தன்னம்பிக்கைப் போராளி சாலை விபத்தில் மரணித்தது விதியாலா? கவனக்குறைவாலா?!

இந்திய நெடுஞ்சாலைகளினோரம் ஏதோ ஓரிடத்தில் சீறி வரும் வாகனம் ஏதோவொன்றால் தூக்கி வீசப்பட்டு நொடியில் மரணம் சம்பவிக்க வேண்டும் என்றெண்ணித்தான் ஷனா தனது நாடு தழுவிய மோட்டார் சைக்கிள் பயணத்தைத் துவக்கினார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

கார்த்திகா வாசுதேவன்

சாகும் வயதில்லை ஷனாவுக்கு. வாழ்க்கையை அதன் அத்தனை ரசனைகளோடும் வாழத்துடிக்கும் 30 வயதுப் பெண்மணி. நேற்று, தன் கணவர் அப்துல் நதீமுடன் ஹைதராபாத், நர்சிங்கி எனுமிடத்தில் நெடுஞ்சாலை கார் விபத்தொன்றில் திடீரென மரணித்து விட்டார். ஷனாவைப் பற்றிச் சொல்வதென்றால் பேச நிறைய விஷயங்கள் உண்டு. தன்னந்தனியாக தனது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுதும் சுற்றி வந்தவர் ஷனா. யூனியன் பிரதேசங்களைக் கூட விடவில்லை. மொத்த இந்தியாவையும் ஷனா ஏன் சுற்றி வந்தார் என்றால்... அதற்கொரு சுவாரஸ்யமான துவக்கம் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் தாங்க இயலாத மன அழுத்தத்தால் அவதிப்பட்ட ஷனா, சாலை விபத்தில் மரணமடைய வேண்டும் என்று முயற்சித்தார். அப்படித் தொடங்கியது தான் அவரது மோட்டார் சைக்கிள் பயணம். இந்திய நெடுஞ்சாலைகளினோரம் ஏதோ ஓரிடத்தில் சீறி வரும் வாகனம் ஏதோவொன்றால் தூக்கி வீசப்பட்டு நொடியில் மரணம் சம்பவிக்க வேண்டும் என்றெண்ணித்தான் ஷனா தனது நாடு தழுவிய மோட்டார் சைக்கிள் பயணத்தைத் துவக்கினார்.

ஆனால் பயணிக்க, பயணிக்க அவரது தற்கொலை வேகம் தணிந்தது மட்டுமல்ல நாட்டின் வெவ்வேறு கலாச்சாரங்களையும், மக்களது ஏழ்மையையும், கடினமான அவர்களது வாழ்க்கையும் கண்ணாரக் காணக் காண ஷனாவுக்கு தற்கொலையின் மீது வெறுப்பானது. விளைவு தனது பயணத்தின் முடிவில் ஷனா, தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்களௌக்கு மன நல ஆலோசனை வழங்கி அவர்களது தற்கொலை எண்ணத்தை முறித்துப் போகச் செய்யும் அளவுக்கு மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக அடையாளம் காணப்படும் நிலையில் வந்து நின்றார். ஊடகங்கள் ஷனாவுக்கு வழங்கிய அடையாளம் இது தான். தற்கொலை எத்தனை கொடுமையான முடிவு என, அந்த முயற்சியில் ஈடுபட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்களால் தானே உண்மையாக அறிந்திருக்க முடியும். ஷனா அறிந்திருந்தார் என்பதற்கு அவரது தன்னம்பிக்கைப் உரைகளே உதாரணம். 

ஷனாவின் நாடு தழுவிய மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த வீடியோ பதிவு...

YouTube video thumbnail

இப்படி தன்னைப் போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போன அனைவருக்கும் மட்டுமல்லாது அனைத்து இந்தியப் பெண்களுக்குமான முன்னுதாரணமாகத் திகழவல்ல திறமை கொண்ட ஷனா இக்பால், அவரே எதிர்பாராத தருணமொன்றில் அவர் முன்னெப்போதோ நினைத்த அல்லது எதிர்பார்த்திருந்த வகையில் தற்போது அவரது மரணம் நிகழ்ந்தது தான் சோகத்திலும் பெரும் சோகம். விபத்துக்கு காரணம் மிதமிஞ்சிய வேகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

விபத்தில் ஷனா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க அவரது கணவர் அப்துல் நதீம் கடுமையான காயங்களுடன் தொலிசெளக்கியிலுள்ள ஆலிவ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷனாவின் உடல் போஸ்மார்ட்டத்திற்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய வேகத்தில் காரை இயக்கியதில் கார் டிவைடரில் கடுமையாக மோதியதால் விபத்து நேர்ந்திருக்கிறது. எனவே காவல்துறையினர் ஐபிசி 304 (மரணம் குறித்த அலட்சியத்தால் விபத்து நேர்வது) மற்றும் ஐபிசி பிரிவு 337 (பாதுகாப்பு குறித்த கவனமின்றி தன்னுடன் இருப்பவர்களையும் விபத்துக்கு உட்படுத்துதல்) எனும் இரு பிரிவுகளின் மேல் இந்த விபத்து குறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது என தொலிசெளக்கி காவல் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.