அப்போது தான் அவருக்கு voice எனும் தொழில்நுட்பத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை என்னவென்றால் ஒளி அலைகளை ஒலி அலைகளாக மாற்றித் தரக்கூடிய வல்லமை. முகமூடிக் போன்ற இந்த உபகரணத்தில் இரண்டு கருப்புக் கண்ணாடிகள் பொருத்தப் பட்டிருக்கும். அந்தக் கண்ணாடிகளுடன் ஒரு மினியேச்சர் கேமரா மிக மெல்லிய வயர்களால் இணைக்கப்பட்டிருக்கும். இதை கண்களில் அணிந்து கொண்டு பார்க்கையில் பார்வையற்றவர்களால் தங்களது பார்வைப் புலனுக்கு புலப்படாத உருவங்களைப் பற்றி அவர்கள் அது வரை அறிந்திராத புது புதுப் பரிணாமங்கள் கிடைக்கக் கூடும் என்கிறார் பிரணவ். அதுமட்டுமல்ல, இந்த உபகரணம் மூலமாக புகைப்படப்படமெடுக்கவிருக்கும் நபர்களின் அசைவுகளைக் கணித்து அதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பொருளின் அல்லது நபரின் உயரம், தேவையான ஒளி அமைப்புகள் முதலியவற்றைக் கணிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.