ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அக்டோ 26 மயிலையில் ‘டி. பாலசரஸ்வதியின் நாட்டியக் கலைப்பயணம்’ உரையாடல் நிகழ்வு!

டி.பாலசரஸ்வதி அவர்களின் நேரடி சிஷ்யையான  அமெரிக்க நாட்டியக் கலைஞர் ’கே போர்ஷின்’ தனது குரு பாலசரஸ்வதியுடனான தனது கலைப்பயண அனுபவங்களைப் பற்றி பரதக் கலாரசிகர்களுடன் விரிவாக உரையாடவிருக்கிறார்.

News image
Updated On :21 அக்டோபர் 2016, 6:04 am

குமாரி கமலா, பத்மினி, வைஜயந்தி மாலா வரிசையில் பரதக் கலைஞர் டி.பாலசரஸ்வதியை நாட்டியப் பிரியர்கள் அனேகம் பேருக்கு தெரிந்தே இருக்கும். பரதக் கலையை உலகமெலாம் ரசனையுடன் கொண்டு சேர்த்ததில் அவர் ஒரு லெஜண்ட். அவரைப் பற்றியும் அவரது கலை உலகப் பயணத்தைப் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அக்டோ 26 மாலை 6.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துச் சாலையில் இயங்கும் பி.எஸ் உயர்நிலைப் பள்ளியின் விவேகானந்தா ஹாலுக்கு வருகை தரலாம்.

Story image

அங்கு டி.பாலசரஸ்வதி அவர்களின் நேரடி சிஷ்யையான  அமெரிக்க நாட்டியக் கலைஞர் ’கே போர்ஷின்’ தனது குரு பாலசரஸ்வதியுடனான தனது கலைப்பயண அனுபவங்களைப் பற்றி பரதக் கலாரசிகர்களுடன் விரிவாக உரையாடவிருக்கிறார். இந்த நிகழ்வை டாக்டர்.வி. ராகவனின் ’பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ மையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. 

நிகழ்வு: அக்டோ 26 

நேரம்: மாலை 6.30 மணி அளவில்

அட்ரஸ்: விவேகானந்தா ஹால், பி.எஸ் உயர் நிலைப் பள்ளி, ராமகிருஷ்ண மடத்துச் சாலை, மயிலாப்பூர், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.