பணியிடங்களில் அதிக வேலைப்பளுவால் மிரட்டப் படும் போது ஆண்களும், பெண்களும் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என டென்மார்க்கிலிருக்கும் ஆர்ஹஸ் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் முண்ட்ஜெர்க் எரிக்சன் ஒரு ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வின் படி வேலைத் தளத்தில் கொடுமைகளுக்கு ஆளாகும் போது ஆண்கள், மற்றும் பெண்கள் இரு தரப்பினரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவது உலகம் முழுக்க பொதுவான விசயமாக இருந்தாலும், எதிர்வினையாற்றும் போது ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் செயல்படுகிறார்கள். கடைசியில் ஒரே விதமான பிரச்சினையை ஆண் ஒரு விதமாகவும், பெண் ஒரு விதமாகவும் கையாள்வது இந்த விசயத்திலும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.