தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அம்மாவுக்கு என்ன ஆச்சு?

இன்று தமிழ்நாடு முழுக்க ஒவ்வொருவருக்குள்ளும் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி இது ஒன்று தான்!

News image
Updated On :5 டிசம்பர் 2016, 3:27 am

இன்று தமிழ்நாடு முழுக்க ஒவ்வொருவருக்குள்ளும் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி இது ஒன்று தான்! நாளிதழ்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் உடனுக்குடன் வெளிப்படுத்தப் படும் தகவல்களை எல்லோரும் தெரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள், எனினும் ‘அம்மாவுக்கு என்ன ஆச்சு?’ என்பது பலராலும் இன்னமும் அறிந்து கொள்ள முடியாத புதிராகத் தான் நீடிக்கிறது. கடந்த செப்டம்பர் மாத 22 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனை வாசம். இடையில் ஒருமுறை கூட அமைச்சர்களுடனோ, அரசு உயரதிகாரிகளுடனோ கூட நேரிடையாக உரையாட முடியாத நிலை. அப்பல்லோ ‘பிரதாப் ரெட்டியே’ நேரடியாக பிரஸ் மீட்டில் தோன்றி அம்மா பூரண நலத்துடன் இருக்கிறார். இனி வீடு திரும்பலாம் என கடந்த வாரம் அறிவித்த பின்னும் கூட இப்போதும் நீடிக்கும் அம்மாவின் தீவிர உடல்நலமின்மை. இதெல்லாம் பார்க்கும் போது சாமானியர்கள் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது ஒன்றாகவே இருக்கிறது. நீர் சத்து குறைபாடு, நுரையீரல் நோய் தொற்று, தொடரும் சிறுநீரகக் கோளாறுகள், திடீரென வந்துள்ள மாரடைப்பு என எல்லா சவால்களையும் முறியடித்து அம்மா பூரண உடல்நலத்துடன் மீள வேண்டும் என்பதே இன்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விருப்பமாக மாறி விட்டது. 
அம்மா மீள்வாரா?
மீள வேண்டும் என்பது தான்  முந்தைய ஆட்சிகாலத்தில் அவரது பல உத்திரவுகளால் பாதிப்படைந்து விட்டோம் என நினைக்கும் மக்களது விருப்பமாகவும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.