டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பனீர் ஸ்டப்டு பாசிப்பயிறு சப்பாத்தி!

பெரிய சப்பாத்தியின் நடுவில் வதக்கி வைத்துள்ள கலவையை பரவலாக வைக்கவும். அதன் மேல் சிறியதாக போட்டு வைத்துள்ள சப்பாத்தியை

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:13 pm

தவநிதி

தேவையானவை:
கோதுமை மாவு - 4 கிண்ணம்
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
முளைக் கட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம்
பெரிய வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
முட்டைக்கோஸ் - ஒரு கிண்ணம்
பனீர் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை: குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டைக்கோஸ் மற்றும் பனீரை மெல்லியதாக துருவி வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் மற்றும் வெந்நீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். முளைக் கட்டிய பயறை ஆவியில் வேக வைத்து எடுத்து ஆறவைக்கவும்.

ஆறியவுடன் பச்சைமிளகாய் சேர்த்து (தண்ணீர் இல்லாமல்) கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பயறு, தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பனீரைச் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்தியாக போட்டுக் கொள்ளவும். (ஒரு சப்பாத்தி பெரியதாகவும், மற்றொன்று அதைவிடச் சற்று சிறியதாகவும் இருக்கும்படி போட்டுக் கொள்ளவும்). பெரிய சப்பாத்தியின் நடுவில் வதக்கி வைத்துள்ள கலவையை பரவலாக வைக்கவும். அதன் மேல் சிறியதாக போட்டு வைத்துள்ள சப்பாத்தியை வைத்து ஓரங்களை மடித்து மூடவும். இதேபோன்று அனைத்து சப்பாத்திகளையும் தயார் செய்து, தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சப்பாத்திகளைச் சுட்டு எடுக்கவும். சுவையான, பனீர் பச்சைப்பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.