தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயதுமூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி(84). இவர் சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த 2023 இல் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை சுப்பிரமணியம் காலமானார். தந்தை இறந்த இரண்டு ஆண்டிற்குள் தாய் மோகினி மணி உயிரிழந்த செய்தி அஜித் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயாரின் மறைவுச் செய்தியறிந்து, துபையில் இருந்த அஜித் சென்னை விரைந்துள்ளார்.
மோகினி மணியின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்குமார் தாயார் மோகினி மணி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜித் தாயாரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெற்றோர் சுப்பிரமணியம்-மோகினியுடன் அஜித் - கோப்புப்படம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










