ஈரானின் எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா வந்தடைந்துள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதையடுத்து, ஈரானில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரானின் எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டுக்கு வந்தடைந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (மார்ச் 13) தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“இன்று வரையில் ஈரானின் நிலம் வழியாக எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டுக்கு வந்தடைந்துள்ளனர். அவர்களில் சிலர் பத்திரமாக இந்தியா வந்துள்ளனர். மற்றவர்கள் அடுத்த சில நாள்களில் வரக்கூடும்” எனக் கூறியுள்ளார்.
இந்தியர்களை மீட்பதற்கான வெளியுறவு அமைச்சகம் பிரத்யேக கட்டுப்பாட்டு அறையைக்கு, 900 அழைப்புகள் மற்றும் 200 மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் இருந்து ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
170 Indians have so far arrived in Armenia after crossing the border from Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

ஈரானில் இருந்து ஆர்மீனியா, அஜர்பைஜான் வழியாக நாடு திரும்பிய 1,200 இந்தியர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



