மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகதீஷ் பிரசாத் அஹிர்வார் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இவர் காடுகளிலே பீட்-கார்டாகப், அதாவது குறிப்பிட்ட பகுதியின் காவலாளியாக தனது சேவைகளைப் புரிந்து வருகிறார். காட்டில் இருக்கும் பல மருத்துவத் தாவரங்கள் குறித்த தகவல்கள் எங்கும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதை உணர்ந்த அவர், இந்தத் தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டு பதிவிட தொடங்கினார். அவர் 125-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டுள்ளார். அவர் ஒவ்வொரு தாவரத்தின் பெயர், புகைப்படம், பயன்கள், அவற்றின் இருப்பிடம் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். அவர் சேகரித்த தகவல்களை தொகுத்து, புத்தகமாக வனத்துறை வெளியிட்டிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.