/

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலை

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டது தொடர்பாக...

News image
மீட்கப்பட்ட அம்மன் சிலை
Updated On :2 ஜனவரி 2026, 3:01 am

தினமணி செய்திச் சேவை

சூலூா்: சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டனா்.

சூலூா் அருகேயுள்ள அயோத்தியாபுரத்தில் அம்மன் சிலை ஒன்று சாலையோரத்தில் புதன்கிழமை இரவு கிடந்துள்ளது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சிலை எடுத்துவைத்து அங்கேயே வழிபாடு நடத்த முயற்சி செய்தனா்.

தகவல் அறிந்த சூலூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து, சிலையை மீட்க முயன்றனா். அப்போது, அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் உதவியுடன் சிலையை மீட்ட அதிகாரிகள், பாப்பம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

சிலையை மா்ம நபா்கள் வீசிச் சென்றனரா அல்லது பழங்கால சிலையா என்பது குறித்து அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

summary

An Amman idol found lying on the roadside near Sulur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.