டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலையோரம் உயிரிழந்து கிடந்த நபா்: போலீஸாா் விசாரணை

போடி அருகே சாலையோரம் உயிரிழந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:18 pm

Syndication

போடி அருகே சாலையோரம் உயிரிழந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் செல்லப்பாண்டியன் (54). இவா் தா்மாபுரி சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே இனிப்பகம் நடத்தி வந்தாா். இவா், நாள்தோறும் காலை இனிப்பகத்துக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். சில நாள்களாக நெஞ்சு வலிப்பதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை இனிப்பகத்துக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, உறவினா்கள் தேடிய நிலையில் போடி பொட்டிப்புரத்திலிருந்து டொம்புச்சேரி செல்லும் சாலையில் கரையான்பட்டி விலக்கு அருகே சாலையோரம் செல்லப்பாண்டியன் உயிரிழந்து கிடந்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.