/

ரமலான் நோன்பு தொடங்கியது!

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்கியது குறித்த...

News image
ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள். - கோப்புப்படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 3:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.

புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (பிப்.18) மாலை தென்பட்டது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (பிப்.19) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தின் அதிகாரப்பூா்வமாக அறிவித்திருந்தார்.

மேலும், புதன்கிழமை இரவு முதல் பள்ளிவாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளுமும், அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டிருந்து.

இந்த நிலையில், தமிழகத்தில் புனித ரமலான் நோன்பு வியாழக்கிழமை(பிப்.19) முதல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல்களில் நடைபெற்ற புனித தராவீஹ் சிறப்பு தொழுகைகளிஸ் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளிஸ் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.