ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கிய அரசுக்கு நன்றி
ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கான அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு தென்னிந்திய தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் நன்றி தெரிவித்துள்ளது.


ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கான அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு தென்னிந்திய தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அசோசியேஷன் தலைவா் ஹாஜி செய்யது முகம்மது கலிபா ஷாஹிப் காதிரி (படம்) வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியை பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி சமைக்க 2021-ஆம் ஆண்டு 5,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது.
எனினும், தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களுக்கு முழுமையாக அரசு வழங்கும் விலையில்லா அரிசி கிடைப்பதில்லை என அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 2022-ல் 6,000, 2023-ல் 6,500, 2024-ல் 7,040, 2025-ல் 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது. நிகழாண்டு கூடுதலாக 8,700 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்காக அரசு, ரூ.20.88 கோடி செலவிட்டுள்ளது. இதற்காக தென்னிந்திய பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்கள் அசோசியேசன்சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...