ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கள்ளச்சாராய மரணம்: முதல்வர் மக்களை சந்திக்காதது ஏன்?, பயமா ? - இபிஎஸ் கேள்வி

உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த மாவட்ட மக்களை சந்திக்காதது ஏன்? முதல்வருக்கு பயமா?

News image

கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும் என உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவினர்.

Updated On :27 ஜூன் 2024, 5:51 am

சென்னை: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 4 பேர் புதன்கிழமை உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த மாவட்ட மக்களை சந்திக்காதது ஏன்? முதல்வருக்கு பயமா ? என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும், மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை பேரவையில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?

கள்ளச்சாராய மரணங்கள் 63-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று முதல்வர் மக்களை சந்திக்காதது ஏன்? முதல்வருக்கு பயமா?

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்! என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.