15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மன்னிப்பு கேட்ட ஜடேஜா: ரன் அவுட் சர்சை குறித்து மனம் திறந்த சர்ஃபராஸ் கான்!

ஜடேஜாவின் தவறினால் ரன் அவுட் ஆனது குறித்து பேசியுள்ளார் அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 7:33 am

ஜடேஜாவின் தவறினால் ரன் அவுட் ஆனது குறித்து பேசியுள்ளார் அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுக வீரராக களமிறங்கினார்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ரன் அவுட்டால் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஜடேஜா இன்ஸ்டாகிராம் பதிவு

ஜடேஜா இன்ஸ்டாகிராம் பதிவு

இந்த ரன் அவுட்டுக்கு வருத்தம் தெரிவித்து ஜடேஜா, “சர்ஃபராஸ் கானுக்கு நிகழ்ந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். அது என்னுடைய தவறு. அவர் நன்றாக விளையாடினார்” எனப் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து பேசிய சர்ஃபராஸ் கான், “இதெல்லம் விளையாட்டின் ஒரு பகுதி. கிரிக்கெட்டில் இதுபோல நடப்பது இயல்பானது. சில நேரங்களில் ரன் அவுட் ஆகும்; சில நேரங்களில் ரன்களும் கிடைக்கும். உணவு இடைவேளையின்போது நான் ஜடேஜாவிடம் விளையாடும்போது ஆடுகளத்தில் என்னிடம் பேசுங்கள் எனக் கூறினேன். இது எனக்கு முதல்முறை. அவரும் நான் விளையாடும்போது என்னை ஊக்கப்படுத்தினார்” எனக் கூறினார்.

அரைசதம் விளாசிய சர்ஃபராஸ் கான்

அரைசதம் விளாசிய சர்ஃபராஸ் கான் - Kunal Patil

மன்னிப்பு கேட்ட ஜடேஜாவையும் பெருந்தன்மையாக எடுத்துக்கொண்ட சர்ஃபராஸையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்திய அணி 2ஆம் நாளில் 124 ஓவரில் 415/9 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.