15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அதிவேக சதம், கடைசி 7 போட்டிகளில் 7 சதம்: அசத்தும் கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 5:59 am

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசி. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் தனது 32வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.

98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 32 சதம், 33 அரைசதம், 6 முறை இரட்டை சதத்தினையும் அடித்துள்ளார்.

Story image

Andrew Cornaga

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதத்தினை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். மேலும் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

நியூசிலாந்தில் அதிக சதங்கள் அடித்தவர் வரிசையில் வில்லியம்சன் 32 சதத்துடன் முதலிடத்தில் இருக்க ராஸ் டெய்லர் 19 சதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

குறிப்பாக 4வது இன்னிங்ஸில் 1040 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். சராசி 57.77 உடன் 5 சதம், 4 அரைசதம் அடங்கும்.

பேப்4-இல் அதிக சதங்கள் அடித்தவராகவும் இருக்கிறார். பேப்4 என்பது கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடும் நால்வரைக் குறிக்கும். அதில் வில்லியம்சன் 32, ஸ்மித் 32, ரூட் 30, கோலி 29 சதங்களுடன் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.