தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சிவகார்த்திகேயனுடன் இணைந்த கன்னட நடிகை: பூஜை புகைப்படங்கள்!

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல கன்னட நடிகை இணைந்துள்ளார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2024, 7:16 am

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல கன்னட நடிகை இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் அடுத்து விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது.

பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.

அயலான் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் சாய் பல்லவியுடன் சேர்ந்து தேசிங்கு பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவுறும் தருவாயில் இருக்க தற்போது அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

பூஜை புகைப்படம்

பூஜை புகைப்படம் - எக்ஸ்: ஏ.ஆர்.முருகதாஸ்

இந்தப் படத்தில் முதலில் மிருணாள் தாக்குர் நடிப்பதாக தகவல் வெளியான் நிலையில் தற்போது கன்னட நடிகை ருக்மணி வசந்தா ஜோடி சேர்ந்துள்ளார். சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது.

Story image

கன்னடத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பூஜை புகைப்படங்களை இயக்குநர் முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இசை- அனிருத், சண்டைப் பயிற்சி- திலீப் சுப்புராயன். எடிட்டிங்- ஸ்ரீகர் பிரசாத் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.